நேபாளத்தில் மழை பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மட்டும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தின் பாஞ்சதர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 37 பேரும் இலாம் மற்றும் தோட்டி மாவட்டங்களில் தலா 18 பேரும் பலியாகி உள்ளனர். மேலும் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 35 பேர் மாயமாகி உள்ளனர். இதனால் பலிஎண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 4000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீட்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.