நேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தின் சிந்துபால்சோக் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.