world

img

‘ஜனநாயகத்தின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்’

பிரேசிலியா, ஜன.9- பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லூலா தேர்வா னதைச் சகித்துக் கொள்ள முடியா மல் வலதுசாரிக் கும்பல்கள் நடத்தி  வரும் வன்முறை வெறியாட்டங் களுக்கு லத்தீன் அமெரிக்கத் தலை வர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள் ளனர். அக்டோபர் 2, 2022 அன்று நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இடது சாரி வேட்பாளராகக் களமிறங்கிய லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா வெற்றி பெற்றார். ஜனவரி 1,  2023 ஆம் தேதியன்று அவர் பொறுப் பேற்றுக் கொண்டார். தேர்தல் முடி வுகள் வந்ததில் இருந்தே வலதுசாரி யினர், அதை ஏற்றுக் கொள்ளா மல் பல்வேறு சீர்குலைவு நடவடிக் கைகளில் இறங்கி வந்தனர். லூலா பொறுப்பேற்கும் அன்று, அதில்  பங்கேற்காமல் ஜெய்ர் போல்சானரோ தனது ஆதரவு சீர்குலைவுக் கும்பல்களுக்கு இருப்பதை வெளிப்படுத்தினார்.

ஜெய்ர் போல்சானரோவுக்கு ஆதரவான கும்பல் தனது மூர்க்கத்தனமான தாக்குதல் களை தற்போது நடத்தத் தொடங்கி யுள்ளன என்று பிரேசில் தொழி லாளர் கட்சி கருத்து தெரிவித்துள் ளது. ஜனநாயக அமைப்புகளின் மீதான அவர்களின் தாக்குதல்கள் மக்களின் தீர்ப்பை நிலைகுலையச் செய்வதற்காகத்தான் என்று அக்கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களும் இந்த வன்முறை வெறியாட்டத்திற்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக் கிறார்கள்.  பிரேசில் தலைநகர் பிரேசிலியா வின் தெருக்களில் வன்முறை வெறி யாட்டங்களை நிகழ்த்திய வலது சாரிக் கும்பல், நிர்வாகத் தலைமை யகம், தேசிய காங்கிரஸ் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றிற்குள் புகுந்து அவற்றைக் கைப்பற்றி யதாக அறிவித்தது. கடுமையான சேதத்தை அங்கு ஏற்படுத்திய கும்பல் தங்கள் “கலகம்” வெற்றி பெற்றதாகவும் கூறிக் கொண்டது. பாதுகாப்புப் படையினர் அந்த கட்டி டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்து கொண்டிருக் கிறார்கள்.

முதல் எதிர்ப்புக்குரல்

இந்தக் “கலகத்திற்கு” எதிராக  முதல் குரல் கியூபாவில் இருந்து எழுந்தது. அந்நாட்டின் ஜனாதிபதி யான மிகுவேல் டயஸ்-கானெல், “வன்முறை மற்றும் ஜனநாயக விரோதச் செயல்கள் பிரேசிலில் நடந்து வருகின்றன. நாங்கள் அத ற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜனா திபதி லூலாவைத் தேர்வு செய்த மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை இவர்கள் நிராகரிக்கிறார்கள்” என்று தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார். அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி யும், செலாக்(லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளின் கூட்ட மைப்பு) அமைப்பின் தற்போதைய தலைவருமான ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ், “ஏற்றுக்கொள்ள முடியாத ஜனநாயகத்திற்கு எதி ரான இந்தத் தாக்குதல்கள் மக்கள் விரோத முடிவைத் திணிக்க முயல்கிறது. வலதுசாரியினரால் முன் னிறுத்தப்படும் இந்தக் கலகத்தை பிரேசில் மக்கள் அனுமதிக்கமாட் டார்கள். ஜனநாயகத்தைப் பாது காக்கும் பணியை அவர்கள் செய்வா ர்கள்” என்று தெரிவித்தார். மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ருஸ் மானுவல் லோபஸ் ஓப்ர டார், கொலம்பிய ஜனாதிபதி குஸ்தவோ பெட்ரோ மற்றும் பொலி வியாவின் முன்னாள் ஜனாதிபதி  இவோ மொரேல்ஸ் ஆகியோரும்  வலதுசாரிகளின் வன்முறை வெறி யாட்டங்களைக் கண்டித்திருக் கிறார்கள். அமெரிக்க நாடுகளின் அமைப்பை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கியூபா, அர்ஜெண்டினா மற்றும் மெக்சிகோ  ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டு, இத்தகைய ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கான நோக்கத்தை கேள்விக்கு உட்படுத்தி யிருக்கிறார்கள்.