world

img

மதவெறியின் சின்னங்களுக்கு அமெரிக்காவில் அனுமதி கிடையாது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளி கள், அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினர்கள்  ஒன்றி ணைந்து ஆண்டுதோறும் “இந்தியா  தின அணிவகுப்பு” என்ற பெயரில்  பிரம்மாண்டமாக விழா  நடத்தப்படு வது வழக்கம். இந்த ஆண்டுக்கான  இந்தியா தின அணிவகுப்பு ஆகஸ்ட்  18 அன்று நடைபெற்ற நிலையில், கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அள வில் இந்த ஆண்டில் பாஜகவின் இந்துத்துவா அரசியல் நிகழ்வால் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

ராமர் ஊர்திக்கு  அனுமதி மறுப்பு

அந்த பிரச்சனை யாதெனில் இந்  தியா தின அணிவகுப்பு விளம்ப ரத்திற்காக உருவாக்கப்பட்ட வீடியோவில் அயோத்தியின் ராமர்  கோவிலின் பெரிய மாதிரி காட்சிப்  படுத்தப்படும் என்று கூறப்பட்டுள் ளது. இதற்கு அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினர்கள், தெற்காசிய அமெரிக்க அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததால், இந்தியா தின அணிவகுப்பில் “ராமர் கோவில் அலங்கார ஊர்திக்கு” நியூயார்க் நகர நிர்வாகம் அனுமதி மறுத் துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் (நியூ யார்க் நகர பிராந்தியம்) கூட்டாக  வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியூயார்க் நகரம் ஒட்டுமொத்த தெற்காசிய சமூகங்களையும் கருத்  தில் கொண்டு இந்த அறிக்கையை வெளியிடுகிறது. இந்துக்கள் மற் றும் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் நியூயார்க் நகரத்தின் தெருக்களில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்  பரியத்தை பிரதிபலிக்கும் கொண் டாட்டங்களை மேற்கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால்  இதுபோன்ற பொதுக் கொண்டாட் டங்களில் ராமர் ஊர்தி போன்ற பிரி வினை அல்லது மதவெறியின் சின்  னங்கள் இருக்கக் கூடாது என்பதில்  நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

மேயருக்குப் பறந்த கடிதங்கள் 

தெற்காசிய அமெரிக்க அமைப்புகள் மட்டுமின்றி அமெ ரிக்க அமைப்புகளும் “ராமர் கோவில் ஊர்திக்கு” அனுமதி தரக் கூடாது என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் மற்றும் நியூயார்க்  ஆளுநர் கேத்தி ஹோச்சுலுக்கு கடி தம் எழுதியுள்ளனர். அக்கடிதத் தில்,”ராமர் கோவில் ஊர்தி அணி வகுப்பு முஸ்லிம்களுக்கு எதிரா னது. அது ‘மசூதி’ இடிப்பு சம்ப வத்தை கொண்டாடுவது போல் உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

ஓரங்கட்டப்பட்ட  ராமர் ஊர்தி

மதவெறியின் சின்னங்களுக்கு அமெரிக்காவில் அனுமதி கிடை யாது என கடும் எதிர்ப்பு கிளம்பி யதால் இந்தியா தின அணிவகுப் பில் “ராமர் கோவில் ஊர்தி” பங்கேற்கவில்லை. ஆளில்லா இடத்தில் கேட்பாரற்று  “ராமர் கோவில் ஊர்தி” நிறுத்தி வைக்  கப்பட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது.