world

img

இந்திய பயணிகளுக்கு தடைவிதிப்பு.... நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு...

வெல்லிங்டன்:
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா  மூன்றாவது இடத்தில்உள்ளது. 

இந்நிலையில், தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும்பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும்அனைத்து பயணிகள், சொந்த குடிமக்கள் உள்பட அனைவருக்கும் நியூசிலாந்து வர தற்காலிகமாக அனுமதியில்லை என்றும் இந்த தடை ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல்28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தெரிவித்துள்ளார்.

;