இந்தியாவிற்கு உதவ தைவான் அரசு தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் டசாய் இங் வென் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமாக பரவி வருகிறது.
இதனைத்தொடர்ந்து, இந்தியாவிற்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவிற்கு உதவ தைவான் அரசு தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் டசாய் இங் வென் அறிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு இந்த கடினமான சூழலில் தைவான் அரசு உடன் நிற்கிறது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.