நாடியா, (மேற்குவங்கம்), நவ.28- மேற்குவங்கம் மாநிலம் நாடியா மாவட்டத்தில் ஞாயிறன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்த னர். நாடியா மாவட்டத்தில் இறுதிச் சடங்குக்காக உடலை எடுத்துச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற வாகனம், சாலை யோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் இறந்தவர்கள் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பாக்தாவில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பலியான 18 பேரில் ஆறு பெண்கள், ஒரு குழந்தையும் அடங்குவர். படுகாயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடர்ந்த பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.