world

img

சோமாலியாவில் ஜனாதிபதி மாளிகை அருகே குண்டு வெடிப்பு - ஒருவர் உயிரிழப்பு 

சோமாலியாவில் ஜனாதிபதி மாளிகை அருகே குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதிஷீவில் ஜனாதிபதி மளிகைக்கு அருகில் உள்ள சாலையில் இன்று காலை பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
 

;