world

img

பருவநிலை மாற்றத்தால் 30 நாடுகளில் காலரா பரவல் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பருவநிலை மாற்றம் காரணமாக, 2022-ல் 30 நாடுகளில் காலரா நோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசுத்தமான நீர் மற்றும் உணவு பொருட்கள் போன்றவற்றின் மூலம் காலரா நோய் பரவும். சர்வதேச அளவில், கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 20-க்கும் குறைவான நாடுகளில் காலரா நோய் பரவல் ஏற்பட்டிருந்தது. பாகிஸ்தான், ஹைதி, லெபனான், மாளவி, சிரியா உள்ளிட்ட நாடுகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக, 2022-ல் 30 நாடுகளில் காலரா நோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் 1.3 முதல் 4 மில்லியன் பேர் வரை இந்நோயால் பாதிக்கப்படுவதாகவும், 21,000 முதல் 1,43,000 பேர் இதில் மரணமடைவதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.