world

img

இரண்டு மிகப்பெரிய சவால்கள் - ஜி ஜின்பிங் எச்சரிக்கை

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கோல்ஸ் ஆகியோருடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நடத்திய காணொளி வாயிலான கூட்டத்தில் இரண்டு பெரிய சவால்கள் நம்முன் நிற்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்.

சர்வதேச அளவிலான ஒத்துழைப்பை மேற்கொண்டு தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் பெருந்தொற்று ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டும் என்று இருவரிடமும் ஜி ஜின்பிங் சுட்டிக்காட்டியுள்ளார். அமைதியை முன்னிறுத்துவது, வளர்ச்சியைக் கொண்டு வருவது மற்றும் உலகில் நிலைத்தன்மையைக் கொண்டு வருவது ஆகிய அம்சங்களில் ஐரோப்பிய யூனியனும், சீனாவும் ஒத்த கருத்துக்களையே கொண்டுள்ளன. இரு தரப்பும் பேச்சுவார்த்தையை மேம்படுத்தி, இரு தரப்பு உறவுகளை உயர்த்திப் பிடிப்பது இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு முக்கியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தலைவர்கள்  பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தற்போது உலகம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. ஒவ்வொரும் தங்கள் விருப்பத்திற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிலைமை மோசமாகவே செய்யும் என்று கூறிய அவர்கள், சர்வதேச அரங்கில் சீனாவின் முக்கியமான மற்றும் நேர்மறையான பாத்திரத்தை ஐரோப்பியத் தரப்பு பெரிதும் மதிக்கிறது. பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் பிற சர்வதேச சவால்களை எதிர்கொள்ள சீனாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறோம் என்று குறிப்பிட்டனர்.

உலகக் போருக்குப் பின்பாக, மிகப்பெரும் நெருக்கடியை ஐரோப்பா சந்தித்து வருவதாக உக்ரைன் நிலைமை குறித்து இருவரும் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையும், அமைதிக்கு ஒரு வாய்ப்பைத் தர வேண்டும் என்பதையும் இரு தலைவர்கள் வலியுறுத்திப் பேசினர். இது குறித்துக் கருத்து தெரிவித்த ஜி ஜின்பிங், "போர் வெடித்திருப்பது கவலையளிக்கிறது. ஐரோப்பியக் கண்டத்தில் மீண்டும் போர் நடப்பது வருத்தமளிக்கிறது" என்று குறிப்பிட்டார்.
அனைத்து நாடுகளின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும். இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் உள்ள கோட்பாடுகள் நடைமுறையில் இருக்க வேண்டும். உலகின் அனைத்து நாடுகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தீவிரமாகப் பரிசீலித்தல் அவசியமாகும். நெருக்கடி ஏற்பட்டால், ஒரு அமைதிக்கான தீர்வை எட்ட மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு கிட்ட வேண்டும் என்று சீனத்தரப்பு தெரிவித்திருக்கிறது.