world

img

சீன தடுப்பூசிகள் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு....

சீனாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவது குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசிகள் குறித்து உலக சுகாதார அமைப்பு சார்பில்  வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில்,“சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம், சினோவாக் கொரோனா தடுப்பு மருந்துகளை அவசரத் தேவை களுக்குப் பயன்படுத்துவது குறித்து இந்த வாரம் அறிவிக்கப்படும். சில நாடுகள்தடுப்பூசிகளைச் செலுத்து வதற்கு எங்கள் முடிவுக்காகக் காத்திருக்கின்றன என்பதை நன்கு அறிவோம். விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;