world

img

தலைசிறந்த உறுப்பினர்களுக்குப் பதக்கங்களை வழங்கிய ஜி ஜின்பிங்....

பெய்ஜிங்:
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த உறுப்பினர்களைப் பாராட்டி ஜுலை-1  எனும் பதக்கம் அளிக்கும் விழா, ஜுன் 29 செவ்வாய்க்கிழமை காலை பெய்ஜிங்கி லுள்ள மக்கள் மாமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சீன ஜனாதிபதியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு பொதுச் செயலாளரும் மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஜி ஜின்பிங், கட்சியின் தலைசிறந்த உறுப்பினர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார்.

இவ்விழாவில் ஜி ஜின்பிங் உரைநிகழ்த்துகையில்,கடந்த 100 ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தலைமுறை தலைமுறையாக நாட்டின் சுதந்திரம், தேசத்தின் செழிப்பு மற்றும் வலிமை, மக்களின்மகிழ்ச்சி  ஆகியவற்றுக்காகப் போராடி வருகின்றனர். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆரம்பக்கட்டக் குறிக்கோளில் உறுதியுடன்  நிலைத்து நின்கின்றனர் என்று குறிப்பிட்டார்.கட்சி உறுப்பினர்கள், மக்களை முதலிடத்தில் வைத்து, தன்னலமின்றி பொது மக்களுக்குச் சேவை புரிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆரம்பக்கட்டக் குறிக்கோளை நினைவில் வைத்து, நவீனமய மான நாட்டைப் பன்முகங்களிலும் உருவாக்கும் புதிய பயணத்தில் 2ஆவது நூறாண்டுக்கால இலக்கையும் சீனத் தேசத்தின் மறுமலர்ச்சியையும் நோக்கிச் செல்வதற்குப் போராட வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை ஜி ஜின்பிங் கேட்டுக்கொண்டார்.ஜுலை-1 பதக்கம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு அளிக்கும் உச்ச நிலை கௌரவம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த
விழாவில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 29 உறுப்பினர்களுக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டது.

;