world

img

சீனாவில் கனமழையின் காரணமாக 56 பேர் உயிரிழப்பு

சீனாவில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹெனான் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மேலும் 18 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்தப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வந்தது. இது கடந்த 1000 ஆண்டுகளில் மிக அதிகபட்ச மழை அளவாகும். இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மாயமாகியுள்ளனர். 376,000 பேர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இந்த மழை வெள்ளம் காரணமாக 1,000 கோடி டாலர் மதிப்பிலான  பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

;