பெய்ஜிங், ஜூன் 24- காலநிலை மாற்றம் காரணமாக சீனா வில் 60 ஆண்டுகள் இல்லாத அளவில் வெயில் கொளுத்தி வருகிறது. காலநிலை மாற்றத்தால் உலகின் ஒவ் வொரு பகுதிகளிலும் வாழும் மக்கள் தங்க ளது இயல்பு வாழ்க்கையில் பல்வேறு சிர மங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வெயில் என்றால் வெப்ப அலைக்கு நிகராக வெப்பம், மழை என்றால் வெள்ளப்பெருக்கி ற்கு நிகராக இடைவிடா கனமழை, குளிர் என்றால் வெப்ப மண்டலத்தில் கூட உறை பனி அளவில் கடுங்குளிர் என காலநிலை மாற்றம் உலகின் அனைத்து பகுதிகளிலும் மிரட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மித வெப்பநிலை பகுதியான சீனாவில் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த மே மாதம் ஷாங்காய், கிழக்கு கடற் கரைப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதாவது 30 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு அதிகமாக வெப்பநிலை நிலவிய நிலையில், தற்போது சீனாவின் தலைநகர் மண்டலமான பெய்ஜிங் உள்ளிட்ட பகுதிக ளில் 60 ஆண்டுகாலம் இல்லாத அளவில் 41 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெயில் கொளுத்தியுள்ளது. இதனால் பெய்ஜிங், தியான்ஜின், வடக்கு மற்றும் கிழக்கு சீனப் பகுதியில் வெயிலுக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சீன அரசு.