world

img

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்....

பெய்ஜிங்:
சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந் தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடி ரூபாய் களை செலவிடுகின்றன. சந்திரயான் விண்கலத்தின் மூலம் நிலவில் நீர்இருந்ததற்கான ஆதாரத்தை இந்தியாகண்டறிந்தது, விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

இதில் செவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலைமாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும்.இந்த நிலையில் தற்போது செவ் வாய்கிரகத்தில் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரைஇறங்கியுள்ளதாக சீனா அறிவித்துள் ளது. சீன விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப் படுகிறது.செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும்கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப் பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ் வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன.

;