world

img

சீனா புதிய விண்வெளி சாதனை.... சுரொங் ரோவரை செவ்வாயில் தரையிறக்கியது...

பெய்ஜிங்:
சீனா வெற்றிகரமாக தன் சுரொங்ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கியதாக, அந்நாட்டின் அரசு ஊடகம் அறிவித்துள் ளது. செவ்வாயில் தரையிறங்குவது மிகவும் கடினமானது என்பதால், சீனாவின் சுரோங் ரோவரின் வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், சுரொங் ரோவர் தரை இறங்கிமிறக்கிய இரண்டாவது நாடு என்கிற பெருமையை சீனா பெற்றிருக்கிறது. 

அதிகாரப்பூர்வமாக இந்த விண்கலம், பெய்ஜிங் நேரப்படி சனிக் கிழமை காலை 7.18 மணிக்கு தரையிறங்கியதாக அரசு ஊடகம் கூறுகிறது.ஆறு சக்கரங்களைக் கொண்ட சுரொங் ரோவர், செவ்வாய் கிரகத்தின்வடக்குப் பகுதியில் இருக்கும் பெரியநிலப்பரப்பான உடோபியா பிளானிடியா என்கிற இடத்தை இலக்கு வைத்து, பாதுகாக்கும் கேப்ஸ்யூல், பாராசூட், ராக்கெட் தளம் போன்றவைகளைப் பயன்படுத்தி செவ்வாயில் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளது.இதுகுறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளதாவது, ‘‘இந்த சவாலை எதிர்கொள்ள நீங்கள் போதுமான தைரியத்தோடு இருந்தீர்கள், உங்கள் பணியில் சிறந்து விளங்கினீர்கள், கோள்களை ஆராயும் நாடுகள்பட்டியலில் நம் நாட்டை முன்னேற்றம் காண வைத்திருக்கிறீர்கள்’’ என அவர்குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.சுரொங் என்றால் ‘நெருப்புக் கடவுள்’ என்று பொருள். இந்த ரோவரை சுமந்து சென்ற டியான்வென் 1 என்கிறசுற்றுவட்டக் கலன் பிப்ரவரி 1 ஆம் தேதிசெவ்வாய் கோளைச் சென்றடைந் தது.

புவிக்கும் செவ்வாய் கோளுக்கும் இடையிலிருக்கும் தொலைவு 320 மில்லியன் கிலோமீட்டர். அதாவது புவியில் இருந்து செவ்வாய்க்கு ரேடியோ அலைவரிசை மூலம் செய்திகள் சென்று சேரவே சுமார் 18 நிமிடங் கள் தேவைப்படும். எனவே, சுரொங் ரோவர் செவ்வாயில் தரையிறங்கும் அடுத்தடுத்த சிக்கலான பணிகள் அனைத்தும் தன்னிச்சையாக நடக்க வேண்டும். செவ்வாய் கோளின் சூழலுக்குள் நுழைவது, தரையை நோக்கிமெல்ல தரையிறங்குவது என ஒவ் வொன்றாக நடக்கவேண்டியிருந்தது.

சீனாவின் ஆற்றல்
செவ்வாய் கோளில் தரையிறங்கிஇருக்கும் சுரொங் ரோவரை, செவ் வாயின் நிலவியல் அமைப்புகளைக் குறித்து ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் குறைந்தபட்சமாக 90 செவ்வாய்நாட்களுக்காவது பயன்படுத்துவார் கள். செவ்வாயில் ஒரு நாள் அல்லது ஒரு சோல் என்பது 24 மணி நேரம் 39 நிமிடங்களாகும்.சுரொங் ரோவர் இயந்திரத்தின் எடை சுமார் 240 கிலோகிராம். இதற்கான ஆற்றல் சூரிய விசைத் தகடுகளில் இருந்து கிடைக்கிறது. ஓர்உயர்ந்த கம்பம் போன்ற அமைப்பில்கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் படமெடுக்கவும், வழிகாட்டவும் முடியும். அதோடு ஐந்து கூடுதல் உபகரணங்கள் இந்த சுரொங் ரோவரோடு பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி செவ்வாய் கோளில் இருக்கும் பாறைகளைக் குறித்து ஆராயவும், நிலத்தடியில் நீரினாலான பனிக்கட்டிகள் இருக்கின்றனவா என ஆராயவும் முடியும்.சீனா விண்வெளித் துறையில் தன் ஆற்றலை வெளிக்காட்டி வருகிறது. அதில் சமீபத்தில் நிலவில்இரண்டு ரோவர்களை தரையிறக்கியது குறிப்பிடத்தக்கது.

;