world

இந்தோனேசிய புதிய ஜனாதிபதி எதிர்கொள்ளும் சவால்கள்!

இந்தோனேசியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரும், முன்னாள் ராணுவ ஜெனரலுமான பிரபோவோ சுபியாண்டோ  நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இதன் அதிகாரப்பூர்வ முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும்.  தேர்தல் முடிந்த பிறகு  மாதிரி வாக்கு எண்ணிக்கைகளில் அவர்  60  சதவீத வாக்குகளைப் பெற்றதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.  அமெரிக்காவின் சிஐஏ சூழ்ச்சியால் இந்தோ னேசிய ராணுவ ஜெனரல் சுகார்தோ தலைமை யிலான ராணுவம், அந்நாட்டின் ஆட்சியை கைப் பற்றி 10 லட்சத்திற்கும் அதிகமான கம்யூனிஸ்ட்டு களையும் மக்களையும் படுகொலை செய்தது. அந்த ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றிய சுபியாண்டோ தான் தற்போது புதிய ஜனாதிபதியாக உள்ளார்.  இந்தோனேசியா, தன் நாட்டின் இயற்கை வளங்களை எடுப்பதற்கு தேவையான உள் நாட்டு கட்டமைப்பிற்காக வெளிநாட்டு முதலீட்டை தீவிரமாக நாடி வருகிறது. மேலும் அமெரிக்கா சீனாவிற்கு இடையேயான சர்வதேச பொரு ளாதாரப் போட்டியில்  எந்த ஒரு நிலைப்பாட் டையும் எடுக்காமலேயே சீனாவுடனான தனது  வணிக உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. இந் நிலையில் புதிய ஜனாதிபதியாக வரும்  சுபி யாண்டோவும் இந்த நிலையையே பின்பற்று வாரா என கேள்வி எழுந்துள்ளது.  பொருளாதாரச் சவால்கள், தொடரும் போராட்டங்கள் இந்தோனேசியா, அதன் வரலாற்றில் கடுமை யான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண் டுள்ளது. 1990 களின் பிற்பகுதியில் ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது கடுமையான மந்த நிலை, சமூக அமைதியின்மை மற்றும் சுகார்தோ  தலைமையிலான சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.  பின்னர் 2008-09 இல் உலகளாவிய நிதி நெருக்கடி, நாட்டின் வளர்ச்சியில் மந்தநிலை யையும், அதிக பணப் பற்றாக்குறையையும், அந் நாட்டு நாணயத்தின்  மதிப்பில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியது. 2020-21இல் ஏற்பட்ட கொரோ னா தொற்றுக்குப் பிறகும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்தது.  2021 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி   2.75 கோடி மக்கள் (10.15 சதவீதம்)  வறுமை யில்  தள்ளப்பட்டனர். 15-24 வயதுடைய இளை ஞர்களில் 14.1 சதவீதத்தினர் வேலையின்மை யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வேலையில் உள்ள இளைஞர்களும் சமூக பாதுகாப்பற்ற முறைசாரா தொழில்களிலேயே பணிபுரிந்து வருகின்றனர். மேலும் வளர்ச்சித் திட்டங்களுக்கு  போதிய முதலீடுகள் இல்லா தது, புதிய கண்டு பிடிப்புகள் இல்லாதது என  இந்தோனேசியா சுயச்சார்புடன் வளர இயலா மல்  உற்பத்தித்திறனுக்காக  போராடிவருகிறது.   இதனால் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பேரழிவுகள், இயற்கை வளங்கள், பல்லுயிர்  பேரழிவுகளை கட்டுப்படுத்தும் திறன் ஆகிய வற்றிலும் அந்நாடு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.     வெளிப்புற ஒத்துழைப்புக்களை அவசி யமாக்கியுள்ள நிலையில், புதிய அரசுக்கு  சர்வதேச பொருளாதாரப் போட்டியில் உள்ள  அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான உறவுகளை சமநிலையைப் பேணி நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு வளர்க்கப் போகி றது என்பது பெரும் சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.