கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுடனான உறவில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக வெளி யுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செவ்வா யன்று மக்களவையில் தெரிவித்தார்.
இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இரு நாடுகளும் மூன்று அடிப்படை கொள்கைகளின் அடிப்படையில் உறவுகளை முன்னெடுக்க உடன்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த அக்டோபர் 21-ம் தேதி கையெழுத் தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து படை கள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளன. இதன் மூலம் எல்லைப் பகுதி களில் நிலவிய பதற்றம் குறைந்துள்ளது.
“எல்லைப் பிரச்சனைக்கு நியாயமான மற்றும் இருதரப்பும் ஏற்கக்கூடிய தீர்வு காண இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்காக மூன்று முக்கிய கொள்கைகளை வகுத்துள்ளோம். முதலாவதாக, உண்மையான கட்டுப் பாட்டுக் கோட்டின் (LAC) புனிதத்தன்மையை இரு நாடுகளும் கண்டிப்பாக மதிக்க வேண்டும். இரண்டாவதாக, தற்போதைய நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்ற எந்தத் தரப்பும் முயற்சிக்கக் கூடாது. மூன்றாவதாக, கடந்த கால ஒப்பந்தங்களை யும் புரிந்துணர்வுகளையும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்” என்று அமைச்சர் விளக்கினார்.
இந்த உடன்பாட்டின் மூலம், பாரம்பரிய மாக மேய்ச்சல் நிலங்களாக பயன்படுத்தி வந்த பகுதிகளுக்கு இந்திய குடி மக்கள் மீண்டும் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளனர். மேலும், எல்லைப் பகுதி களில் வழக்கம்போல ரோந்து பணிகளும் தொடரும் என அமைச்சர் உறுதியளித்தார். எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப் படுத்த, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “எல்லைப் பகுதிகளில் அமைதியும் நிம்மதி யும் நிலவுவது இருநாட்டு உறவுகளை மேம்படுத்த அவசியமானது.
இதன் மூலமே நல்லுறவை வளர்க்க முடியும்” என்று அமைச்சர் வலியுறுத்தினார். இந்த உடன்பாடு இந்தியா-சீனா இராஜதந்திர உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல் என கருதப்படுகிறது. தேசிய பாதுகாப்பையும் நலன்களையும் பாது காக்கும் அதே வேளையில், சமாதான வழி யில் பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சியாக வும் இது பார்க்கப்படுகிறது. மக்களவை யில் உறுப்பினர்கள் இந்த அறிவிப்புகளை வரவேற்றுள்ளனர். எல்லைப் பிரச்சனையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், வரும் காலங்களில் இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை முன்னி றுத்தி, சமரசம் செய்யாத வகையில் இந்த உடன்பாடு அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.