பெய்ஜிங், ஜன, 2-
சீனாவில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் திடக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கு எந்த வகையிலும் திடக்கழிவுகள் இறக்குமதி செய்வது இதன் மூலம் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதே நேரம் சீனாவில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகளை உயர் தர தொழில்நுட்பத்துடன் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் மறுசுழற்சி செய்து அதனை மீண்டும் பயன்படுத்த வேண்டும். அதற்கான அனைத்து வகை ஆற்றலையும் சீன அரசு ஏற்படுத்தி கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.