சியோல்,டிச.31- ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில் தென்கொரிய ஜனாதி பதிக்கு அந்நாட்டு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் டிசம்பர் 3 அன்று அந்நாட்டில் திடீரென அவசரநிலை ராணுவச் சட்டத்தை அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் அவசர நிலை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தன. இதனைத்தொடர்ந்து இந்த அவசரநிலைச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. இந்த அவசரச் சட்டத்தை அமல்படுத்தியதற்காக யூன் சுக் யோல் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் போராட்டங் கள் நடத்தினர். எதிர்க்கட்சியும் நாடாளு மன்றத்தில் பதவி விலக தீர்மானம் கொண்டு வந்தது. யூன் சுக் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு இடைக்கால ஜனாதி பதியாக செயல்பட்ட ஹான் டக்-சூ மீதும் நம்பிக்கையில்லா இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஜனாதிபதி யூன் சுக் மீதான குற்றச்சாட்டில் 3 முறை ஆஜர் ஆகக் கூறியும் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகாததால் அவரை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில் கைது வாரண்ட்டுக்கு விண்ணப்பிக்கப் பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் யூன் சுக்கை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.