world

img

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 3 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
“தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று  அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. மேலும் ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவாகியது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். 
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 

;