கனடா நாட்டின் மாண்ட்ரீல் நகரில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய உயிர்ப் பன்மயத்தன்மை உச்சி மாநாடு காப்15 இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டி ருக்கும்நிலையில் இந்நூற்றாண்டின் இறுதிக்குள் பூமியில் வாழும் பத்தில் ஒன்றுக்கும் அதிகமான தாவர, விலங்கினங்கள் அழிந்துவிடும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
மரத்தவளைகள் முதல் சுறாக்கள் வரை
இரை இழக்கப்படுவதால் இரையைப் பிடித்து உண்டு வாழும் உயிரினங்கள், விருந் தோம்பிகள் அழிவதால் ஒட்டுண்ணிகள் மற்றும் புவி வெப்ப உயர்வால் உயிர் வலை (web of life) துண்டாடப்படுவதால் வரும் பத்தாண்டுகளில் இந்த இனப்பேரழிவும் அதனு டன் சேர்ந்து துணைப் பேரழிவும் (coextinction) நிகழும் என்று சமீபத்தில் சயின்ஸ் அட்வான்சஸ் (Science Advances) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. மரத்தவளை முதல் பாஸ்கிங் (basking) சுறாக்கள் வரை அழியும் வாய்ப்புள்ள 150388க்கும் அதிகமான உயிரினங்கள் இந்த இன அழிவை எதிர்கொள்ள நேரிடும் என்று கருதப்படுகிறது. இதுபோன்ற உயிரினங்களை சர்வதேச இயற்கை வளப் பாது காப்பு மையம் (IUCN) பேரழிவு நேரிடும் உயிரினங்களின் பட்டியலில் வெளியிட்டு வருகிறது. மனிதக் குறுக்கீடுகளால் மட்டும் 42,000க்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழியும் ஆபத்து உள்ளது.
செயற்கை பூமியும் மெய்நிரல் உயிரினங்களும்
செயற்கையாக பூமியை உருவாக்கி அதில் மெய்நிரல் (virtual) வடிவத்தில் உயிரி னங்களை உருவாக்கி விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை நடத்தினர். புவி வெப்ப உயர்வு மற்றும் நில வளச் சுரண்டல் உயிரி வலையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆராயப் பட்டன. ஆய்வின் முடிவில் 2050இல் பூமியில் இன்று வாழும் 6 சதவீத உயிரி னங்கள் அழிந்துவிடும். இந்நூற்றாண்டின் இறுதிக்குள் இது 13 சதவிகிதமாக அதிகரிக்கும். 2100இல் புவிவெப்ப உயர்வு அதிகமானால் இது 27 சதவிகிதமாக உயரும் என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதிரிகள் உருவாக்கப்பட்டு அழியப்போகும் தாவர விலங்கினங்கள் பற்றிய விவரங்கள் பெறப்பட்டன என்று ஹெல்சிங்கி பல்கலைக்கழக விஞ்ஞானியும் ஆய்வுக்கட்டுரை இணை ஆசிரியர்களில் ஒருவருமான டாக்டர் ஜவானி ஸ்ட்ரோனா (Dr Giovanni Strona) கூறுகிறார். உயிர்ப் பன்மயத்தன்மையின் இரண்டாம்நிலை பாதிப்புகளை யும் கண்டுபிடித்துள்ளதால் இந்த ஆய்வு தனிச்சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. உணவு வலையில் (food web) ஏற்படும் மாற்றங்கள் உயிர்ப் பன்மயத்தன்மையின் இழப்பிற்குக் காரணமாக அமைகிறது என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் மற்றும் ஆஸ்திரேலியா ஃப்ராட்ஷா அப்லிண்டர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் கோரி (Prof Corey) கூறுகிறார். சில காலம் முன்பு குப்பைகளில் உணவு தேடியலைந்த ஸ்ரீலங்கா யானைகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
ஒரே நேரத்தில் இரண்டு பேரழிவுகள்
காலநிலை பாதிக்கப்பட்டு இரைகள் அழிகின்றன. இதனால் இரையையுண்டு வாழும் உயிரினங்களும் அழிகின்றன. இது முதன்மை இனப்பேரழிவு, துணை இனப்பேரழிவு (co extinction) என்று அழைக்கப்படுகிறது. காடுகள் அழிக்கப்படுவ தால் ஒட்டுண்ணிகள் அழிகின்றன. பூமி சூடாவதால் பூக்கும் மலர்களில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் அழிகின்றன. ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒரு வகையில் மற்றொன்றைச் சார்ந்தே வாழ்கிறது. 33,000 உயிரினங்கள் வாழும் செயற்கை பூமிகள் உருவாக்கப்பட்டு உயிர்ப் பன்மயத்தன்மை செழுமை இழக்கப்படுவதால் உயிரினங்கள் எவ்வாறு அழிவிற்கு ஆளாகின்றன என்று மாதிரிகள் கொண்டு ஆராயப்பட்டது. இதில் சில உயிரினங்கள் பூமியின் புதிய இடங்களுக்குச் சென்று அங்கு புதிய காலனிகளை அமைக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
உச்சிமாநாட்டின் கடைசி நாட்களில்
மாண்ட்ரீல் காப்15 மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் சூழல் அமைச்சர்கள் வரும் பத்தாண்டிற்கான பூமியின் பாதுகாக்கப்படவேண்டிய இயற்கை வளங்கள் பற்றி முடிவு செய்யவுள்ளனர். சீன பரப்பிற்கு சமமான பூமியின் 30 சதவீத நிலப்பரப்பை இயற்கை வளம் பாதுகாப்பது தொடர்பான வடகோள உலகிற்கும் தென்கோள உலகிற்கும் இடையில் பேசப்பட்டுவருகிறது. நிதியுதவி தொடர்பான தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.
விஞ்ஞானிகளின் கடிதம்
2030ஆம் ஆண்டிற்குள் இழக்கப்பட்ட உயிர்ப் பன்மயத்தன்மையை மீட்டு பூமியின் வளங்களை மிதமிஞ்சியவிதத்தில் மனிதன் நுகர்வதைத் தடுக்கும் நடவ டிக்கைகளை காப்15 மாநாட்டின் இறுதி வரைவில் சேர்க்க வலியுறுத்தி 2700 விஞ்ஞானி கள் உலக ஆட்சியாளர்களுக்கு திறந்த கடிதம் அனுப்பியுள்ளனர். ஆட்சியாளர்கள் இப்போது செயல்படவில்லை என்றால் மக்களிடையில் வறுமை யும், சமத்துவமின்மையும் அதிகரித்து சமூக அமைதி பாதிக்கப்படும் என்று விஞ்ஞானி கள் எச்சரிக்கின்றனர். கேடு தரக்கூடிய வகையில் அமைந்துள்ள பணக்கார நாடு களின் நுகர்வு கலாச்சாரம் ஏற்கனவே காலநிலை மாற்றத்தினால் சீரழிந்து கொண்டி ருக்கும் ஏழை நாட்டு மக்களின் வாழ்வுரிமைகளையும் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இதனால் பன்மயத்தன்மை செழுமையுடைய ஏழை நாடுகளுக்கு பணக்கார நாடு கள் நிதியுதவி செய்யவேண்டும். மாநாடு தொடங்கியதில் இருந்து முதல்முறையாக மாண்ட்ரீல் நகரில் பனிப்பொழிவு தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் 20 வரை பேச்சுவார்த்தைகள் நீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியின் உயிர்ப் பன்மயத்தன்மையில் 95 சதவீதம் அடங்கும் கடல்வளத்தைக் காக்கவும், வளங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் நாடுகளுக்கு இடையில் பொதுவான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. காப் உயிர்ப் பன்மயத்தன்மை அமைப்பில் வாட்டிகன், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே இன்னும் சேராமல் உள்ளன. வடகோள நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியமும் தென்கோளப்பகுதி யில் சீனாவும் இம்மாநாட்டில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
சீனாவின் தலைமையில்
சீனத் தலைவர் மாநாட்டின் ஆரம்பத்தில் காணொலி மூலம் பிரதிநிதிகளிடம் “புகழ் பெற்ற சீனப் பழமொழி சொல்வதை மேற்கோள் காட்டி பூமியில் உள்ள எல்லா உயிரி னங்களும் சமாதானத்துடன் வாழும்போதே இயற்கையிடம் இருந்து அனைத்து வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழமுடியும். உயிர்ப் பன்மயத்தன்மை பூமியை உயிரோட்டம் உள்ளதாக மாற்றுகிறது. மனிதன் உயிர் வாழ, வளர அடித்தளம் அமைத்துக்கொடுக்கிறது. பூமியைக் காப்பது நம் சொந்த வீட்டைக் காப்பதற்கு ஒப்பானது. இயற்கையே மனித வளர்ச்சிக்கு நிலையாகப் பங்களிக்கிறது. மனிதன் இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும். இயற்கையை நாம் ஆதரித்தால் அது நமக்கு ஏராளமாக அள்ளித்தரும். நாம் அதைச் சுரண்டினால் அது நம்மை தயவு தாட்சண்யம் இல்லாமல் தண்டிக்கும்” என்று பேசினார். மாநாடு தொடங்கியதிலிருந்து வருகையாளர்களுக்கு ஒவ்வொருநாளும் உலகப் புகழ்பெற்ற சீனத் தேநீர் வழங்கப்படுகிறது. ஐநாவின் பிரதிநிதி காப்15 உச்சிமாநாட்டை முதல்முறையாக பொறுப்பேற்று நடத்தும் சீனாவின் தலைமைப்பண்பை பாராட்டிப் பேசினார். உயிர்ப் பன்மயத்தன்மையைக் காக்கப் பத்தாண்டிற்கு ஒரு முறை மட்டுமே கூடும் காப் அமைப்பின் மாண்ட்ரீல் மாநாடு இறுதிகட்டத்தை அடையும் நிலையில் பல கருத்து வேறுபாடுகளால் பிரிந்து கிடக்கும்உலக நாடுகளை ஒன்றுதிரட்டி மாநாடு வெற்றி பெற சீனா முழுமுயற்சியுடன் பாடுபட்டுவருகிறது. நல்ல முடிவுகளுக்காக நாமும் காத்திருப்போம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்