காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளான அல் ஷிபா மற்றும் இந்தோனேசிய மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டிருந்த 28 குறைமாதக் குழந்தைகள் எகிப்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் தற்போது காசாவில் உள்ள முக்கிய மருத்துவ மனைகளின் மீது தாக்குதலை நடத்தி போர்க் குற்றங்களை செய்து வருகிறது.