ரஷ்யா-உக்ரைன் கைதிகள் பரிமாற்றம்
2022 ஆம் ஆண்டு உக்ரைன்- ரஷ்யா போர் துவங்கிய பிறகு முதன் முறையாக மிக அதிகளவிலான கைதிகளை பரி மாறிக் கொண்டுள்ளனர்.இரு நாடுக ளுக்கும் இடையே சவூதி அரேபியா நடத்தி வந்த பேச்சுவார்த்தையின் அடைப்படையில் ரஷ்ய சிறையில் இருந்து 200க்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டு போர்க்கைதிகள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.இதனை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய பாதுகாப்பு துறை உறுதிப்படுத்தியுள்ளன.
4 நாளாக தொடரும் தேடுதல் பணி
ஜப்பானில் நிலநடுக்கம் ஏற் பட்டதை தொடர்ந்து நிலச்சரிவு கள் காட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள வர்களை தேடும் பணி நான்கு நாட்க ளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 78 ஆக உயர்ந்துள் ளது.300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 33,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளி யேறியுள்ளனர். சுமார் 1,00,000 வீடுகளுக்கு தண்ணீர் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டங்கள் நிறுத்தம்
அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே அறிமுகப் படுத்திய தொழிலாளர் விரோத சட்டங்க ளை அந்நாட்டு நீதிமன்றம் இடை நிறுத்தியுள்ளது.தொழிலாளர்களின் போராட்ட உரிமை பறிப்பு ,வேலை நீக்கத்திற்கு நஷ்டஈடு மற்றும் பெண்களின் பேறுகால விடுப்பு உள்ளிட்டவற்றை நீக்கி புதிய தொழிலாளர் சட்டங்களை மிலே அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் அதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் வழக்கு தொடுத்திருந்தன. இதையடுத்து அந்த சட்டங்களை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. a