world

img

தீக்கதிர் உலக செய்திகள்

குழந்தைகளை படுகொலை செய்தது தற்காப்பாம்

இஸ்ரேலின் கொலைவெறிக்கு நியாயம் கற்பிக்கும் ஜெர்மனி

பெர்லின்,ஆக.16- காசாவில் உள்ள தபன் பள்ளியில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனர்கள் மீது அதிகாலையில் இஸ்ரேல் ஏவுகணை வீசி குழந்தைகள் உட்பட 100 பேரை படுகொலை செய்தது. இந்த கொலைவெறித் தாக்குத லுக்கு உலகம் முழுவதும் கண்ட னங்கள் எழுந்தன.

ஆனால் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பாலஸ்தீ னர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்தது நியாயமா னது எனவும், குழந்தைகள், பெண்களை இஸ்ரேல் கொலை செய்ததை தற்காப்பு நடவடிக்கை எனவும் அநியாயமான முறையில் இனப்படுகொலைக்கு ஜெர்மனி நியாயம் கற்பித்துள்ளது. இந்த இனப்படுகொலைக்கு ஆதரவாகப் பேசுவதற்கு முன்தினம், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் ஜெர்மனியும் சேர்ந்து இஸ்ரேல் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கூட்டறிக்கை வெளி யிட்டது குறிப்பிடத்தக்கது.

ஈரான் துணை ஜனாதிபதி  11 நாட்களிலேயே ராஜினாமா 

ஈரானின் துணை ஜனாதிபதி மொஹமட் ஜாவத் ஷரீப் பதவியேற்ற 11 நாட்களிலேயே ராஜினாமா செய்துள்ளார். “எனது வேலையில் நான் திருப்தியடையவில்லை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடிய வில்லை என்று வருந்துகிறேன்” என்று தனது சமூக வலைதளக் கணக்கில் எழுதி யுள்ளார். எனினும் புதிய ஜனாதிபதியான  பெசெஷ்கியானின் 19 பேர் கொண்ட புதிய அமைச்சரவைக்கான தேர்வுக ளில் தனது விருப்பத்தை ஏற்றுக்கொள்ளாததே இந்த ராஜி னாமாவிற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.