அபியா,ஆக.22- காலநிலை மாற்றங்களால் பசிபிக் நாடுகள் அழிவை எதிர்கொள்கின்றன என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்ட ரெஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஓசியானியா நாடான சமோவாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், பசிபிக் தீவுக ளின் எதிர்காலம் என்பது பூமியின் வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய நிலையான 1.5 டிகிரி செல்சியசுக்குள்ளாக கட்டுப்படுத்துவதில் தான் அடங்கியுள்ளது என குறிப்பிட்டார்.
இந்த இலக்கை அடைய திட்டமிட்டு வேலை செய்வதாக கிட்டத்தட்ட 200 நாடுகள் 2015 ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒப்புக்கொண்டன. ஆனால் தற்போது ஐ.நா. மேற்கொண்டுள்ள கணக் கீட்டின்படி உலக நாடுகள் அதை அடையும் பாதையில் இல்லை என காட்டியுள்ளது.
உயர்ந்த மற்றும் உயர்ந்து வரும் கடல் மட்டங்கள் சமோவா உள்ளிட்ட வளரும் நாடு களாக உள்ள பசிபிக் தீவு நாடுகளுக்கு மிகப் பெரிய ஆபத்தை உருவாக்கும். இந்த சிறிய தீவு நாடுகளைப் பாதுகாக்க சர்வதேச அளவில் நாடுகள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கார்பன் வெளியேற்றும் நாடுகளில் பசிபிக் நாடுகள் வெறும் 0.02 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளன. வளர்ந்த முதலாளித்துவ நாடுகளே பெருமளவு கார்பன் உமிழ்வுக்கு காரணமாக உள்ளன.
ஆனால் குறைந்த அளவு கார்பன் உமிழும் பசிபிக் தீவு நாடுகள் போன்ற வளர்ந்து வரும் குட்டி நாடுகளே காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் தீவிரமான பாதிப்புகளை அதிகளவு எதிர்கொண்டு வருகின்றன.
உலகளவில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இது கோடிக்கணக்கான பசிபிக் தீவு மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற் படுத்தியுள்ளது. காலநிலை மாற்றத்தால் வளரும் மற்றும் குட்டி நாடுகளில் உள்ள மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்கி றார்கள். அவர்களுடைய பொருளாதாரம் அழிந்து வருகிறது.
இதனால் வளரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர் கொள்ள பணக்கார நாடுகள் தாங்கள் கொடுத்துள்ள உறுதிமொழிகளுக்கு உண்மை யாக இருக்க வேண்டும் என்றும் குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.