அடிஸ் அபாபா,பிப்.01- கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பி யாவின் டைக்ரே மற்றும் அம்ஹாரா பகுதிக ளில் கிட்டத்தட்ட 400 பேர் உணவு குடிநீர் இல்லா மல் பட்டினியால் இறந்துள்ளனர் என்று விசா ரணைகுழு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 2020 முதல் 2022 வரையில் நடைபெற்ற எத்தி யோப்பிய உள்நாட்டுப் போருக்குப் பிறகு உருவான வறட்சி பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக நாடு முழுவதும் சுமார் 2.1 கோடி எத்தியோப்பியர்களுக்கு மனி தாபிமான உதவி தேவைப்படுகிறது.
55 லட்சம் மக்கள் வாழும் டைக்ரேயில் (போரில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி ) தீவிர வறட்சி மற்றும் விவசாயம் முற்றிலும் சிதைக்கப் பட்டுள்ள நிலையில் உணவு தானியங்களுக்கு கையேந்தும் நிலை நீடித்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் பட்டினி குறித்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் டைக்ரேயில் மட்டுமே 351 பேர் பட்டினியால் மரணமடைந்துள்ளனர். அம்ஹாராவில் 44 பேர் மரணமடைந்துள்ளனர் என தெரிவித்துள் ளனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வாழ்வா தாரம் தேவைப்படும் பெரும் பகுதி மக்களின் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே உதவியைப் பெறுகின்றனர்.
கடந்த ஆண்டு நிவாரணத் திற்காக கொண்டுவரப்பட்ட தானியங்கள் திரு டப்பட்ட காரணத்தினால் அமெரிக்காவின் அழுத்தத்தால் ஒரு மாதத்திற்கும் மேலாக ஐ.நா உதவி நிறுவனங்கள் தானியங்கள் வழங்கு வதை இடைநிறுத்தி மீண்டும் தானிய விநியோ கத்தைத் தொடங்கின. உணவு உதவி இடை நிறுத்தம், மெதுவான விநியோகம் உள்ளிட்ட கார ணங்களால் டைக்ரேயில் பலருக்கும் ஒரு வரு டத்திற்கும் மேலாக உணவு உதவி கிடைக்க வில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி யுள்ளது. இதுவும் மக்கள் மரணிக்கக் காரணம் என்ற தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
மேலும் 2024 ஜனவரி 21 வரை டைக்ரேயில் உள்ள மனிதாபிமான உதவி நிறுவனங்கள் 32 லட்சம் மக்களுக்கு உணவு தானிய உதவி வழங்க இலக்கு நிர்ணயித்தன.ஆனால் அதில் வெறும் 14 சதவீத மக்களுக்கு மட்டுமே அவர் களால் உதவி செய்ய முடிந்துள்ளது என ஐ.நா உலக உணவுத் திட்ட இணைத் தலைவரான டைக்ரே உணவுத்தொகுப்பு மற்றும் எத்தியோப் பிய அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை தெரி வித்துள்ளனர். அந்நாட்டின் அபார், அம்ஹாரா மற்றும் ஒரோமியா பகுதிகளில் குழந்தைகளி டையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் 15.9 சதவீதம் முதல் 47 சதவீதம் வரை உள்ளது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
மனிதாபிமான உதவிக் குழுக்கள் விரை வான நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது வறட்சிக் காலத்தில் மேலும் அதிகளவிலான பெண் கள், குழந்தைகளின் மரணத்திற்கு வழிவகுக் கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.