world

img

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் கைது!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கிராமின் அறக்கட்டளை நிறுவன ரான முகமது யூனுஸ், வங்கதேசத்தின் தொழி லாளர் சட்டங்களை மீறியதாகக் கூறி குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். பேராசிரியரான யூனுஸ் மற்றும் அவர் அறக் கட்டளையை சேர்ந்த மூன்று பேர் மீது தொழி லாளர் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் என அறிவித்து  ஆறு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது வங்கதேச நீதி மன்றம். தற்போது மேல்முறையீடுகள் நிலுவை யில் உள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  

சில ஆண்டுகளாகவே   இவர் மீது  அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையான விமர்சனங்க ளையும்  அவமதிப்பையும் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 83 வயதான பேராசிரியர் யூனுஸ் 2006 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வர்.வறுமை ஒழிப்பு பெண்களுக்கு அதிகார மளித்தல் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்க ளிப்புகளுக்காக சர்வதேச அளவில் அங்கீ கரிக்கப்பட்டவர்.

வங்கதேசத்தில் வறுமை மற்றும் மேம்பாடு  ஆகியவற்றில் உள்ள பல்வேறு பிரச்சனை களை சரி செய்வதற்காக பல்வேறு சிறு நிறுவ னங்களை உருவாக்கியுள்ளார். குறிப்பாக கிராமின் தொலைபேசி நிறுவனம், கிராமின் ஆற்றல் நிறுவனம், கிராமின்நிதி நிறுவனம், கிராமின் ஜவுளி மற்றும் பின்னலாடை, கிராமின் கல்வி, கிராமின் விவசாயம், கிராமின் மீன்வளம் மற்றும் கால்நடைகள், கிராமின் வணிக மேம்பாடு என பல அறக்கட்டளை களை நிறுவியுள்ளார். பேராசிரியர் யூனுஸ், கிராமப்புற (கிராமின்) வங்கியை நிறுவியதன் மூலம் முதலாளித்து வத்தை சமூகப் பொறுப்புடன் இணைக்கும் புது மையான முறையை கையாண்டவர்.  

ஏழைக ளுக்கு சுயதொழில் செய்ய அதிகாரமளிக்கும் வகையில் குறைந்த அளவிலான கடன்  வழங்கு வதற்காக இந்த நுண்கடன் நிறுவனங்கள் உரு வாக்கப்பட்டன. 1976 ஆம் ஆண்டின் போது முன்னோட்ட திட்டமாக உருவாக்கப்பட்ட இந்த கிராமின் வங்கி, வங்கதேசத்தில் உள்ள 82,072 கிராமங்களில் 75 கோடி மக்களுக்கு  பிணை இல்லா  கடன்களை வழங்கியது. இதில் 97 சதவீத பெண்கள் பயனடைந்தனர்.