world

img

தீக்கதிர் உலக செய்திகள்

நேபாளத்தில் நிலச்சரிவு  11 பேர் பலி
நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் 11 பேர்  பலியாகியுள்ள தாகவும் 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பருவமழை துவங்கிய பிறகு நிலச்சரிவு மற்றும் மின்னல் தாக்குதல்களால் ஜூன் மாதம் முதல் 50 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலச்சரிவுகளால் பல முக்கிய சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் இயல்பான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

‘சாஹேல்’ நாடுகள் மீண்டும் எச்சரிக்கை 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொரு ளாதார சமூக கூட்டமைப்பின் மாநாடு  துவங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பங்களை நிறைவேற்றும் இந்த கூட்டமைப் பில் இருந்து மாலி, நைஜர், புர்கினோ பாசோ  ஆகிய ‘சாஹேல்’ நாடுகள் விலகிவிட்டன. அந்நாடுகளை மீண்டும் இணைக்க  பொருளா தார சமூக கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சாஹேல் நாடுகளின் ராணுவ தலை வர்கள் மீண்டும் ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப் பிற்கான புதிய ஒப்பந்தத்தில் கையழுத்திட்டுள்ளனர்.

வங்கதேச வெள்ளம்  20 லட்சம் மக்கள் பாதிப்பு 

காலநிலை மாற்றத்தால் கொட்டித்தீர்த்த மழையால் வங்கதேசத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் பல்வேறு வகை களில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து ள்ளது. கனமழையால் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.  இந்த ஆறுகளுக்கிடையே  17 கோடி மக்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

நேதன்யாகு பதவி விலகக்கோரி தொடரும் யூதர்கள் போராட்டம் 

இஸ்ரேல் பிரதமர்  நேதன்யாகு பதவி விலக வேண்டும் என பிரதமரின் வீட்டை முற்றுகையிட்டு யூதர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். காசாவில் போர் துவங்கி 9 மாதங்கள் ஆகும் நிலையில் பணயக் கைதிகளை முழுமையாக மீட்க  நேதன்யாகு முயற்சிக்கவில்லை என  தொடர்ந்து இஸ்ரேல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  சமீபத்திய போராட்டத்தின் போது தண்ணீர் பீச்சியடித்து மக்கள் மீது  அந்நாட்டு காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது.

வரலாறு காணா வெப்பம் : அமெ. தொழிலாளர்களுக்கு  அச்சுறுத்தல் 

காலநிலை மாற்றத்தால் உருவாகியுள்ள அதிக வெப்ப  அலையின் காரணமாக 13 கோடிக்கும் அதிகமான அமெரிக்க தொழிலாளர்கள்  அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். அந்நாட்டின் வடகிழக்கு பகுதிகளில்  சுமார் 38 டிகிரி செல்சியஸ்  ஆக வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வாளர் ஜேக்கப் ஆஷெர்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இந்த அதிக வெப்பத்தால் திறந்த வெளியில் பணியாற்றும் தொழிலாளர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

சீனா - பாக் ஒத்துழைப்பின்  புதிய சகாப்தம் துவங்குகிறது 

சீனா - பாகிஸ்தானுக்கு இடையேயான ஒத்துழைப்பின் புதிய சகாப்தம் துவங்குவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

சீனப் பயணத்தின் பொது இரு நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும், உறவை ஆழப் படுத்துவதற்கும் வழிவகுக்கும் வகையிலும் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொடர்பு, சுரங்கம் மற்றும் எரிசக்தித் துறைகளில்  ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் தெரிவித்தார்.