இஸ்ரேலில் தொடரும் போராட்டங்கள்
ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்காத இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு எதிராக கைதிகளின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்ற னர். போரை விரிவுபடுத்தி வரும் நேதன்யாகு தலைமை யிலான ஆட்சியை நீக்கி விட்டு போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்; பணயக்கைதிகளை மீட்கவேண்டும் என அவரது உருவ முகமூடி அணிந்து போராடினர்.
ஜப்பானில் பலி எண்ணிக்கை உயர்வு
ஜனவரி 1 அன்று ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 126 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுள் சிக்கி காணாமல் போயுள்ளனர். 5,400 மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை மற்றும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ள காரணங்களால் மீட்பு பணி 8 நாட்களாக நீடித்து வருகிறது.
போயிங் விமான சேவை நிறுத்தம்
அமெரிக்காவில் 16,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது போயிங் 737-9 மேக்ஸ் ரக விமானத்தின் அவசரகாலக் கதவு திடீரென கழன்று பறந்தது. இந்த விபத்தை தொடர்ந்து அலாஸ்கா விமான நிறுவனம் ஆய்வு மேற்கொள்வதற்காக அந்நிறு வனத்தின் 65 போயிங் 737 மேக்ஸ் 9 விமானங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
எல் நினோவை எதிர்கொள்ள தயார்: பெரு
எல் நினோ காலநிலை மாற்ற நிகழ்வுகளை சமாளிக்க தயாராக உள்ளதாக பெரு அறிவித்துள்ளது. இத்தாக்கம் துவங்கும் முன்பே அதிகாரிகள் விழிப்புடன் “எச்சரிக்கை நிலையில்” உள்ளனர் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் சாவேஸ் செய்தி யாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்பை சமாளிப்பதற்காக 900 பொறியியல் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தொடர்ந்து திட்டமிட்டு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.