தென் அமெரிக்கா நாடான அர்ஜெண்டினாவில், 2023 டிசம்பர் 10-ல் ஜேவியர் மிலே என்ற வலதுசாரி ஜனாதிபதியாக பொறுப் பேற்றார். தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில், ஜேவியர் மிலே சட்டங்களை திருத்த முயற்சித்து வருகிறார். இதை எதிர்த்து ஜனவரி 24 ல் பல லட்சக்கணக்கான தொழிலாளர் தேசிய பொது வேலை நிறுத்தம் செய்தனர் . வரலாற்றில் முதல்முறையாக, அர்ஜெண்டினாவின் மூன்று பிரதான தொழிற்சங்கங்களும் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
ஜெனரல் கான்பிடரேசன் ஆப் லேபர் (சிஜிடி ), அர்ஜெண்டின் ஒர்க்கர்ஸ் சென்ட்ரல் யூனி யன் மற்றும் அர்ஜெண்டின் ஒர்க்கர்ஸ் சென்ட்ரல் யூனியன் (தன்னாட்சி) ஆகி யவை அந்த மூன்று சங்கங்கள். மனித உரிமை அமைப்புகள், மற்ற தொழிற் சங்கங்கள், சமூக, அரசியல் சக்திகளும் போராட்டத்தை ஆதரித்துள்ளன.
ஜேவியர் மிலேயின் சட்டங்கள், தொழிலாளர் உரிமைகளை பறிப்பவை; கொடூரமான நவீன தாராளமய சிக்கன நடவடிக்கைகளை திணிப்பவை; நாட்டின் இறையாண்மையை பாதிப்பவை; பிரதான அரசுக் கம்பெனிகளை, அரசு வங்கிகளை தனியார்மயமாக்குபவை; அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பவை. ஜனவரி 24 வேலை நிறுத்தத்திற்கு விரிவான சர்வதேச ஆதரவு கிடைத் துள்ளது .133 நாடுகளில் பத்தரை கோடி தொழிலாளரை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐடியுசி தொழிற்சங்க சம்மேளனம், 163 நாடுகளில் 19.1 கோடி தொழி லாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐடியுசி ஆதரவு அறிக்கைகளை வெளி யிட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் உள்ள, அர்ஜெண்டினா தூதரக அலுவலகங் கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துமாறு இந்த இரண்டு அறிக்கைகளும் கூறுகின்றன.
பாசிச சக்திகளுக்கு எதிராக ஜெர்மனி மக்கள் ஆவேசம்
கடந்த பத்தாண்டாக ஜெர்மனியில் தீவிர வலதுசாரி பயங்கரவாதம் வளர்ந்து வருகிறது. நவீன நாஜி தேசிய சோசியல் அண்டர்கிரவுண்ட் போன்ற தீவிர வலதுசாரி கிரிமினல் அமைப்புகளுக்கும் , அரசு பாதுகாப்பு படை யினருக்கும் ரகசிய ஒப்பந்தம் இருப்பது அம்பலம் ஆகியுள்ளது.
இதற்கு எதிராக பரவலாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜெர்மனியின் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கை யில், 2023 நவம்பர் 25-ல் தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள், குறிப்பாக ஜெர்மனிக்கான மாற்று என்ற கட்சியை சேர்ந்தவர்கள், கிறிஸ்துவ ஜன நாயக யூனியன் உறுப்பினர்களின் கூட்டத்தில், ஜெர்மனியில் குடியேறிய வர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப் பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த சதித் திட்டத்திற்கு எதிராக ஜெர்மனியின் இடதுசாரி முற்போக்கு சக்தி கள் நாடு முழுவதும் ‘வலதுசாரிகளை எதிர்த்து ஒன்றுபடுவோம்’ என்ற பதாகையுடன் தீவிர வலதுசாரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆவேசத்துடன் நடத்தியுள்ளன. ஜனவரி 19 முதல் 22 வரை 14 லட்சத்திற்கு மேல் மக்கள், இடதுசாரிகள், தொழிற்சங்கத்தினர், இளைஞர் ,மாணவர் குழுக்கள், பாசிச எதிர்ப்பு குழுக்கள் 100க்கு மேலான நகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பிப்ரவரி 3 இல் பாசிச எதிர்ப்பு பேரணி பெர்லின் மாநகரில் நடைபெறுகிறது.
கடன் நெருக்கடியில் ஜாம்பியா
ஆப்பிரிக்க நாடான ஜாம்பியா பெரும் கடன் நெருக்கடியில் உள்ளது. ஜாம்பியா நாட்டின் இரண்டு செம்பு சுரங்கங்கள், அந்நிய தனியார் கட்டுப்பாட்டிற்கு கைமாறி உள்ளன. ஜாம்பியாவின் ஏற்றுமதியில் 70 சதவிகிதம் செம்பு (தாமிரம்) ஏற்றுமதியாகும்.
பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டக் கூடியது. ஆப்பிரிக்க கண்டத்தில் செம்பு பெரிதும் உற்பத்தி செய்யும் நாடுகளில், ஜாம்பியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மின்சார வாகன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிப்பில் செம்பு அத்தியாவசியமானது .
ஜாம்பியா விடுதலைக்குப் பிறகு, ஜனாதிபதி கென்னத் கவுண்டா சுரங்கத் துறையை தேசிய மயமாக்க முயன்றார். 51 சதவிகித பங்குகள் அரசு வசம் வந்தது. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல தனியார் வசம் இவை கைமாறுகின்றன. ஜாம்பியா நாட்டிலே உள்ள செம்பு சுத்திகரிப்பு நிலையங்கள் பயன் படுத்தப்படுவதில்லை.
மூலப் பொருளான செம்புவை ஏற்றுமதி செய்யாமல், செம்பை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும், மதிப்பு கூட்டப்பட்ட சரக்குகளை ஏற்றுமதி செய்தால் கூடுதல் அந்நிய செலாவணி கிடைக்கும் என இடதுசாரிகள் கூறுகின்றனர். ஆனால் இதை பன்னாட்டு கம்பெனிகளின் ஏகாதிபத்தியம் விரும்புவதில்லை.
தைவான் தேர்தல் : மக்கள் தீர்ப்பு என்ன?
ஜனவரி 13 இல் தைவானில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மக்கள் சீனக் குடியரசுடன் தைவான் இணையக் கூடாது எனக் கூறுகிற ஜனநாயக முற்போக்கு கட்சி வென்றது. இந்த கட்சியை கோமிண்டாங் மற்றும் தைவான் மக்கள் கட்சி எதிர்க்கின்றன. தைவானின் ஜன நாயகத்தைப் பாதுகாப்பதாக அமெரிக்கா கூறிக்கொண்டே, ஜனநாயக முற்போக்கு கட்சிக்கு ஆதரவாக உள்ளது. மக்கள் சீன குடியரசுக்கு ஆதர வான கோமிண்டாங் மற்றும் தைவான் மக்கள் கட்சிகள் மொத்தம் பெற்ற வாக்கு 59.95 சதவிகிதம் ஆகும். இவை தனித்தனியாக போட்டியிட்டன. அதனால் 40 . 05 சதவீதம் வாக்கு பெற்ற ஜனநாயக முற்போக்கு கட்சி வென்றது.
இதுபற்றி, முன்னாள் தூதரும், ராஜீய விவரங்கள் நிபுணருமான எம்.கே. பத்திரகுமார் கூறுகிறார்: கோமிண்டாங் கட்சி தைவானின் சுயேட்சையான நிலையை எதிர்க்கிறது. மக்கள் சீனத்துடன் காரிய சாத்தியமான முறையில் பேச வேண்டும் என்கிறது.
தைவான் மக்கள் கட்சி ,மக்கள் சீனத்துடன் சமாதானமாக வாழ விரும்பு கிறது. தைவானை மக்கள் சீனத்துடன் இணைப்பது, மக்கள் சீனத்தின் உள்நாட்டு பிரச்சனை. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ராஜீய நிலைப்பாடு, தைவான் சீனாவின் பகுதி என்பது.
ஆனாலும் தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை செய்கிறது. தைவான் மக்கள் சீனத்துடன் இணைவதை அமெரிக்கா அராஜகமாக எதிர்க்கிறது”.
காசாவில் லட்சக்கணக்கானோர் பட்டினி
இஸ்ரேலால் பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்ட ,தெற்கு காசாவில் கான் யூனிஸ் என்ற நகரில் இஸ்ரேல் ஹமாஸ் போரில் 109 வது நாளில் இஸ்ரேல் குண்டு வீச்சை தீவிரப்படுத்தியது. ஒரே நாளில் 60 பாலஸ்தீனியர் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பொது மக்கள் தாக்கப்பட்டனர். வெள்ளைக்கொடி பிடித்துவரும் பொதுமக்களும் கொல்லப்பட்டனர் .ஒரே நாளில் 24 இஸ்ரேலிய சிப்பாய்களும் கொல்லப் பட்டனர்.
யுத்தம் தொடங்கியது முதல், இதுவரை 208 இஸ்ரேல் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இது, இஸ்ரேல் அரசு மீது போரை நிறுத்த நிர்பந்தத்தைக் கொண்டு வந்துள் ளது. இஸ்ரேல் சிப்பாய்கள் கொல்லப்படுவது மற்றும் ஹமாசிடம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் விடுதலை இரண்டும் சேர்த்து இந்த நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 23-ல் பணயக் கைதிகளின் குடும்பத்தினர் பலர், இஸ்ரேல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, கோஷங்கள் எழுப்பினர் .
கத்தார் நாட்டு அதிகாரிகள் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட இருதரப்பாரி டமும் பேசி வருகிறார்கள். இரண்டு மாத கால போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒத்துவரும் என தெரிகிறது .இஸ்ரேலிய பணய கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறது. அக்டோபர் ஏழு முதல் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீனர் எண்ணிக்கை 25490; காயமுற்றோர் 63354; காணாமல் போனது 8,000 த்துக்கு மேல் . இடம்பெயர்ந்த 19 லட்சம் காசா மக்கள் வாழ்நிலை மிகவும் சீரழிந் துள்ளது.
உதவி வாகனங்கள் தொடர்ந்து தடுக்கப்படுவதால் கடும் உணவு, மருந்து, மற்றும் இதர அத்தியாவசியப் பொருள் பற்றாக்குறை காசாவில் உள்ளது. சுமார் 5,70,000 பேர் படுமோசமான பசிக் கொடுமையை எதிர் நோக்கி உள்ளனர். பசி, பட்டினியை யுத்தத்தில் இஸ்ரேல் ஆயுதமாக பயன் படுத்துகிறது என ஐநா நிபுணர்கள் கூறுகின்றனர். இது சர்வதேச சட்டத்தின்படி யுத்த குற்றமாகும்.