world

img

தீக்கதிர் உலகச் செய்திகள்

தென்கொரிய ஜனாதிபதி பதவி விலகக்கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சியோல்,டிச.14- தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 3 அன்று ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் உலகையே அதிர்ச்சியில்  ஆழ்த்தினார்.

மக்கள் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின்  நாடாளுமன்ற நடவடிக்கையின் காரண மாக இந்த சட்டம் சில மணிநேரங்களி லேயே முடிவுக்கு வந்தது. இதையடு த்து அவரை பதவி விலகக்கோரி நாடா ளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.மேலும் ராணுவ அமைச்சர் உட்பட முக்கிய தலைவர்கள் விசா ரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு விசாரணையில் உள்ள னர். ஆனால் யூன் சுக் பதவி விலக வில்லை.  இந்நிலையில் தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாவது முறையாக சனிக்கிழ மையன்று  ஜனாதிபதி பதவி நீக்க  தீர்மானத்தின் மீது  வாக்களித்தனர்.

204-85 என்ற வாக்குகளில் அத்தீர்மா னத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி யுள்ளது. இந்த பதவி நீக்கத் தீர்மானம் தொடர்பான ஆவணத்தின் நகல் ஜனாதிபதிக்கும், நீதிமன்றத்திற்கும் வழங்கப்பட்ட பிறகு ஜனாதிபதி  யூனின் அதிகாரங்களும் கடமைகளும் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் யூன் தான் பதவி விலகப் போவதில்லை என்று அறிவித்த துடன் என் மீது குற்றம் சாட்டப்பட்டா லும் அல்லது விசாரணை செய் யப்பட்டாலும் இறுதி வரை போராடு வேன் என்றார். யூனை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்குவதா அல்லது வேறு என்ன நடவடிக்கையை நோக்கி போவது என்ற முடிவெடுக்க நீதிமன்றத்திற்கு 180 நாட்கள் வரை அவகாசம் உள்ளது. அவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டால்,அடுத்த தேர்தலை 60 நாட்களுக்குள் நடத்த வேண்டும்.

சிரியா மீது ஆதிக்கம் செலுத்தும்  நாடாகிறது துருக்கி

சிரியாவில் ஆட்சிக் கவிழ்க்கப்பட்ட பிறகு அந்நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடாக துருக்கி உருவாகி யுள்ளது என ஜெர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார். ஆட்சியை கவிழ்க்க பயங்கரவாதிகள் படைக்கு அமெரிக்காவுடன் இணைந்து துருக்கி முக்கிய உதவிகளை செய்தது. துருக்கியும் தனது எல்லை யை அதிகரிக்க பல ஆண்டு களாக முயற்சித்து வரும் நிலையில் அதனுடைய ஆதிக்கம் அதிகரித்திருப்பது மத்தியகிழக்கில் போர்ச் சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது.

பாலஸ்தீன கைதிகளிடம் 

2023 அக்டோபர் 7 க்குப் பிறகு சிறைப்படுத் தப்பட்டுள்ள பாலஸ்தீனக் கைதிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற மசோதா விற்கு இஸ்ரேல் நாடாளு மன்றம் ஒப்புதல் கொடுத்துள் ளது. ஹமாஸ் மீதான போர் துவங்கிய பிறகு இஸ்ரேல்  ராணுவத்திற்கு எதிராக செயல்படுவதாக ஆதாரம் இன்றி சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர் களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்து  சிறையில் அடைத்துள்ளது. அவர்களிடம் இருந்து தற்போது பணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பில்கேட்ஸ் நிறுவனத்திற்கு எதிராக  எலான் மஸ்க் கருத்து  

டெஸ்லா நிறுவனம் வளர்ந்தால் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் திவாலாகி விடுவார் என்று எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.  எலான் மஸ்க்கிற்கும்  பில்கேட்சுக்கும் இடையே தொழில் போட்டி உள்ளது. எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்துடன் போட்டியிடும் வகையில் பில் கேட்ஸ் முதலீடு செய்துள் ளார். இந்நிலை யில் தான் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், டெஸ்லாவுக்கு எதிராக பில் கேட்ஸ் அதிக முதலீடு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

அதானி சொந்த நிதியில் பணிகள்  மேற்கொள்வதில் பிரச்சனை இல்லை

அதானி நிறுவனம் சொந்த நிதியில் பணிகள் மேற் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என இலங்கை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும்  மன்னாரில் அதானி நிறுவ னத்தின் காற்றாலை மின் னுற்பத்தி திட்டம் இலங்கை யின் நலன்களுக்கு எதிரா னது என்பதால் மட்டுமே அத்திட்டத்தை எதிர்க்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதானி மீது லஞ்ச குற்றச்சாட்டு உள்ளதால் அமெரிக்க நிறுவனத்தின் கடனை அதானி நிறுவனம் மறுத்தது.