ஐ.நா ஊழியர்கள் 200 பேர் கொலை
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அவையின் ஊழியர்கள் 200 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை அவ்வமைப்பின் தலைவர் பிலிப் லாஸரினி ஊடகங்களுக்கு தெரிவித்துள் ளார். மேலும் இது வெறும் எண்கள் அல்ல “இவர்கள் எங்களின் சகாக்கள்” “எங்கள் நண்பர்கள்,” என்று உணர்ச்சி ததும்ப பேசி யுள்ளார். ஐநா அவை உருவாக்கப்பட்டதில் இருந்து ஐநா ஊழியர்கள் மீது இது போன்று தாக்குதல் நடந்ததில்லை என வருத்தத்துடன் பேசியுள்ளார்
விவாதத்தை கிளப்பிய டிரம்ப் பேச்சு
எனக்கு வாக்களியுங்கள் பிறகு வாக்களிக்க வேண் டிய அவசியமே இருக்காது என டிரம்ப் பேசியது விவாதத்தை கிளப்பியுள்ளது. அமெரிக்கா வின் புளோரிடா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் வாக்குசேகரித்த அவர் நானும் கிறிஸ்தவன் தான் நீங்கள் அனைவரும் வந்து எனக்கு வாக்களிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் வாக்களிக்க வேண்டி யதே இல்லை. அனைத்தையும் நான் சரி செய்து விடுவேன் என பேசியுள்ளார். டிரம்ப் தேர்தல் முறையை ஒழிப்பதை குறிப்பிட்டாரா? என விவாதம் கிளம்பியுள்ளது.
தலைவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும்
தங்கள் தலைவர்கள் விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என வங்கதேச மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது. தகுதி அடிப்படையில் வேலை கேட்டும் பாரபட்சமான இட ஒதுக் கீட்டுக்கு எதிராகவும் வங்கதேச மாணவர் கள் போராட்டம் நடத்தினர். அதனை தொ டர்ந்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டு முறையை மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள தலைவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.