ஈரானில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் மேற்கு கோகிலுயே வா பாயெரஹ்மத் மாகாணத்தில் சிசாக் நகரில் வியாழனன்று கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 10.கி.மீ ஆழத்தில் உண்டான இந்த நிலநடுக்கம் காலை 10.02 மணியளவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் 40 பேர் காயம்அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது