இஸ்ரேல்-காசா பகுதியில் அமைதி திரும்பும் வரை, இஸ்ரேலிடம் இருந்து எந்த புதிய ஆர்டர்களையும் பெறமாட்டோம் என அறிவித்துள்ளது இஸ்ரேல் காவல்துறைக்கு சீருடை தைத்துக் கொடுக்கும் நிறுவனம் ஒன்று. இஸ்ரேல்-காசா இடையிலான போரை கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள கூத்துப்பரம்பு உணர்ந்துள்ளது. கூத்துப்பரம்பு பேரூராட்சிக்குட்பட்ட வலிய வெளிச் சத்தில் உள்ள கின்ஃப்ரா பார்க் தோட்டத்தில் உள்ள மரியன் அப்பேர ல்ஸ் ஆடைகள் தயாரித்து வழங்கும் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேல் காவல்துறையினருக்கு சுமார் ஒரு லட்சம் சீருடை தைத்துக் கொடுப்பதைச் செய்து வருகிறது. இஸ்ரேல் தவிர, பிலிப்பைன்ஸ், குவைத், கத்தார் மற்றும் சவூதி அரே பியா போன்ற பல்வேறு வெளிநாடு களில் உள்ள காவல்துறை, தீய ணைப்பு படை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான சீருடைகளை நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இஸ்ரேலுக்கு கடந்த எட்டாண்டு களாக இப்பணியில் ஈடுபட்டுள்ளது தற்போது ஏற்பட்டுள்ள போரால் இஸ்ரேல்-காசா பகுதியில் அமைதி திரும்பும் வரை, இஸ்ரேலிடம் இருந்து எந்த புதிய ஆர்டர்களையும் பெறமாட்டோம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து மரியன் அப்பேரல்ஸ் மேலாண் இயக்குநர் தாமஸ் ஒலிக்கல் கூறியதாவது: இஸ்ரேல் சண்டையால் குழந்தை கள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்பும் வரை இனி இஸ்ரேலிடமி ருந்து எந்த புதிய ஆர்டர்களையும் பெற மாட்டோம். இது மனிதநேயத்தின் அடிப்படை யில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு. இஸ்ரேல்-காசா போர் உலகெங்கிலும் உள்ள மனிதகுலத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. நாங்கள் பொரு ளாதார ரீதியாக மோசமாக பாதிக்கப் பட்டாலும் கூட ஒற்றுமையை வலுப்படுத்த, வெளிப்படுத்த இதன் மூலம் முடிவு செய்துள்ளோம் என்றார். இந்தாண்டு சுமார் ஒரு லட்சம் சீருடைகளை அனுப்புவதற்கான ஒப்புதலை நாங்கள் இஸ்ரேலிய ஏஜென்சி ஒன்றிடமிருந்து பெற்றோம். அது சீருடைகளைப் பெற்று இஸ்ரே லிய காவல்துறையிடம் ஒப்படைக் கும். போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே எங்களுக்கு பணி ஆணை கிடைத்தது. தற்போது தயாரித்துள்ள சீருடைகளை அனுப்பிவிடுவோம். இந்தப் பணி டிசம்பருக்குள் நிறைவு பெறும். தொடர்ந்து போர் முடியும் வரை நாங்கள் புதிய ஆர்டர்களைப் பெறமாட்டோம். இது தொடர்பான எங்கள் முடிவை நாங்கள் ஏஜென்சி க்கு தெரிவித்துள்ளோம் என்றார் மரியன் அப்பேரல்ஸ் மேலாளர் ஷிஜின் குமார். தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் கேரள நிறுவனத்தின் முடிவை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “குண்டுவெடிப்பு காரணமாக மருத்துவமனைகளில் கூட பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ள தால், தார்மீக அடிப்படையில் இஸ்ரே லின் அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது” என்று அமைச்சர் கூறினார். இந் நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்க ளில் 95 சதவீதம் பேர் உள்ளூர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.