பெய்ரூட்,அக்.1- லெபனான் மீது தொடர்ந்து வான் வழித் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது தரைவழித் தாக்கு தலை துவக்கியுள்ளது. இது ஈரானை ஆத்திரமடையச் செய்து போருக்குள் இழுக்கும் இஸ்ரேலின் திட்டம் என சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அக்டோபர் 1 அன்று அதிகாலை யிலேயே தாக்குதலை துவங்கியது இஸ்ரேல் ராணுவம். தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேலின் வடக்குப் பகுதி யை பாதுகாக்க லெபனானின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளை அழிப்பதற்காக தரைவழித் தாக்குதலை நடத்துவோம் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் காலண்ட் கூறிவந்தார்.
மேலும் இது மிகப்பெரிய தாக்குதலாக இருக்காது எனவும் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது எனவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது.ஆனால் செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற பேஜர் தாக்குதல், நஸ்ரல்லாவை கொலை செய்ய நடந்த தாக்குதல் என இஸ்ரேல் நடத்திய ஒவ்வொரு தாக்குதலிலும் பல நூற்றுக்கணக்கான லெபனான் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 1000 க்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் இஸ்ரேல் தாக்குத லில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 6000 க்கும் அதிகமான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 10 லட்சத்தி ற்கும் அதிகமான லெபனானியர்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு அகதி களாக வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க பாது காப்பு கவுன்சிலுடன் ஆலோசித்த பிறகு, இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை துவங்கி யுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் மீது பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி னால், அமெரிக்கா பதில் தாக்குதலை நடத்தும் என பெண்டகன் அறிவித்துள் ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரும் இதனை உறுதிப்படுத்தி யுள்ளார்.
அமெரிக்கா-இஸ்ரேலின் போர் வெறியின் காரணமாக சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஆயுதம் தாங்கிய பாலஸ்தீன ஆதரவு அமைப்பு களும் போரில் இறங்கத் தயாராகி விட்டன. ஹவுதி அமைப்பும் இஸ்ரேலின் டெல்அவிவ், எலியாட் துறைமுகங்களில் உள்ள இஸ்ரேலின் முக்கிய ராணுவ நிலைகள் மீது டிரோன் தாக்குதலை நடத்தி வருகின்றன.
லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தக்கூடாது, போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியே குட்ட ரெஸ் உட்பட பல நாடுகளின் தலை வர்கள் வலியுறுத்தியும் அவற்றை உதா சீனப்படுத்தி விட்டு எப்படியேனும் ஈரானை போருக்குள் கொண்டு வந்து ஒட்டு மொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் போர்க்களமாக மாற்றக்கூடிய வேலை களை இஸ்ரேலும் அமெரிக்காவும் செய்து வருகின்றன.