world

img

இஸ்ரேலுக்கு துணை போகும் இங்கிலாந்து

இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீது நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் வியா ழனன்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வை சந்தித்து  பாலஸ்தீனம் மீதான போருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

முன்னதாக  புதன் கிழமையன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நெதன்யாகுவை சந்தித்து போருக்கு முழு ஆத ரவை வழங்கினார். அதனை தொடர்ந்து  ரிஷி சுனக் கின் பயணம் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மேற்குலக நாடுகளின் அதிகாரப் பூர்வ ஆதரவை காட்டுவதாக கூறப்படுகிறது. 

இஸ்ரேலிய பிரதமருடனான சந்திப்பிற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நீங்கள் மோசமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளீர்கள். உங்களுடன்  நானும்  இங்கி லாந்தும் இருக்கிறோம். உங்களுடன் எனது  ஒற்று மையை வெளிப்படுத்த நான்  வந்துள்ளேன் என கூறினார். ஹமாஸ் நடத்திய தாக்குதலில்  ஏழு பிரிட்டிஷ்  குடிமக்கள்  மரணமடைந்துள்ளனர்  என்றும் ஒன்பது நபர்களை காணவில்லை என்றும் இந்த செய்தியாளர் சந்திப்பில்  அவர் தெரிவித்தார்.

நெதன்யாகுவுடனான சந்திப்பிற்கு பின், நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹமாஸை போல இஸ்ரேல் ராணுவம் பொது மக்களுக்கு தீங்கு விளை விக்காத வகையில்  நடவடிக்கை எடுத்து வருவதாக வும், ஹமாஸால் தான் பாலஸ்தீன மக்களே பாதிக் கப்பட்டுள்ளதாகவும்,மேலும் காசாவிற்கு இஸ்ரேல் மனிதநேய உதவிகளை வழங்க அனுமதித்ததா கவும் அதை வரவேற்பதாகவும் கூறிக்கொண்டார். 

இந்த சந்திப்பை தொடர்ந்து பிரிட்டிஷ் வெளி யுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளெவர்லி, அடுத்த மூன்று நாட்களில் எகிப்து, துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்று போர் குறித்து விவாதிக்க இருப்பதாக அவரது இங்கிலாந்து அலு வலகம் தெரிவித்துள்ளது