world

img

ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம்.... காசாவில் இடித்து தரை மட்டம்....

காசா:
கிழக்கு ஜெருசலேம் நகரில்இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக் கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை விசுவரூபம் எடுத்து வருகிறது. அரேபியர்கள், யூதர்கள் என இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடும் புனிததலத்தில் இருந்து பின் வாங்குமாறுஇஸ்ரேலை ஹமாஸ் எச்சரித்தநிலையில் இஸ்ரேல் பாலஸ் தீனத்தின் காசா முனை பகுதியைகுறிவைத்து வான்தாக்குதல்களை தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு நடத்தினாலும், அந்த ராக்கெட்டுகளை நடுவானில் மறித்து
அழித்து விடும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

காசாமுனைப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் நடத்துகிற வான் தாக்குதல் மிகக்கொடூரமானதாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினருடன் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களும் பலியாகி இருப்பதும், இந்தப் பலி தொடர்வதும் சர்வதேச சமூகத்தை அதிர வைத்துள்ளது.இந்நிலையில், சனியன்று காசாநகரில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைதாக்குதலில், அங்கு அமைந்திருந்த 12 மாடிகளைக் கொண்ட கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. இந்த கட்டிடத்தில்தான் அசோசியேட்டட் பிரஸ், அல்ஜசீரா உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் அமைந்திருந்தன.

இந்த கட்டிடத்தை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அதில் இயங்கிய ஊடகஅலுவலகங்களை சேர்ந்தவர்களையும், குடியிருப்புகளில் வசித்துவந்த மக்களையும் வெளியேறுமாறு ராணுவம் உத்தரவிட்டிருந்தது. இதனால் உயிர்ச் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இருப்பினும் கண்மூடி திறப்பதற்குள் இந்த12 மாடி கட்டிடம் தரை மட்டமானது.இந்த தாக்குதல் குறித்து அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் தலைவர் கேரி புரூட் கூறுகையில், “இதுஎங்களை மிகுந்த அதிர்ச்சிக்குள் ளாக்கி உள்ளது. இந்த கட்டிடத்தில் எங்கள் நிறுவனம் இயங்கியதையும், அதில் பத்திரிகையாளர்கள் இருந் ததையும் அவர்கள் (இஸ்ரேல்) அறிவார்கள். இந்த கட்டிடம் தாக்கப் படும் என்பது குறித்து எங்களுக்கு எச்சரிக்கை வந்தது” என குறிப் பிட்டார்.

;