world

img

இலங்கை எம்.பிக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு....

கொழும்பு:
இலங்கையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை விதித்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று (ஜனவரி 12) தீர்ப்ப
ளித்துள்ளது.நீதித்துறையை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட, பிரீத்தி பத்மன் சுரசேன ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.இவ்வாறுசிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்க, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.2017ஆம் ஆண்டு ஊடகவியலாளர்களிடம் பேசிய ரஞ்சன், நாட்டில் உள்ள பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டநிபுணர்கள் ஊழல் மிக்கவர்கள் என்று குற்றம்சாட்டி இருந்தார்.இதனையடுத்து, நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்புக்கு உட்படுத்தி,நீதித்துறையை அவமதித்ததாக அவர்மீது மகல்கந்தேசுநந்த தேரர், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி சுனில்பெரேரா ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

ரஞ்சன் ராமநாயக்க, இலங்கையின் சிங்கள திரைப்படத்துறையில் பிரபல நடிகராவார்.இவர் அண்மையில் தனக்கு மொத்தமாகக் கிடைத்த  நாடாளுமன்ற அமர்வுப்படி ரூபாய் 40 லட்சத்தை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.அரசியல்வாதிகள், நீதித்துறை சார்ந்தோர் உள்ளிட்ட பலருடன் ரஞ்சன் ராமநாயக்க பேசும்போது பதிவு செய்யப்பட்ட குரல் பதிவுகள், சில காலங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியதை அடுத்து, அவர் சர்ச்சைக்குரியவராகப் பார்க்கப்பட்டார்.

;