world

img

இலங்கை : பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

இலங்கையில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் 13 பேர் உயிரிழந்தனர். 30 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இலங்கை கொழும்பில் உள்ள பசாரா நகருக்கு அருகே பேருந்து ஒன்று செங்குத்துபாதையில் சென்ற போது கவிழ்ந்து விபத்துள்ளானது. 
இது குறித்து காவல்துறை அதிகாரி அஜித் ரோஹானா கூறியதாவது :
கொழும்பிலிருந்து கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசாரா நகருக்கு அருகே பயணிகள் பேருந்து செங்குத்துப்பாதையில் கவிழ்ந்து விழுந்ததாக தெரிவித்தனர். இதில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 30 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். 
மேலும் , முதல் கட்ட விசாரணையில் ஓட்டுநரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதாக , காவல்துறையினர் தெரிவித்தனர். 

;