world

img

இலங்கையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு 

இலங்கையில் மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச் 29-ஆம் தேதி திறக்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

இலங்கையில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் இலங்கை தொற்று பாதிப்பு குறைந்து, பள்ளிகள் திறப்பதாற்கான சூழல் அமைந்துள்ளது. 
இதனையடுத்து இலங்கை சுகாதார அமைச்சகம் பரிந்துரையைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் மார்ச் 29 - ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல்பெரீஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதன்படி இலங்கை மேற்கு மாகாணத்தில் தொற்று குறைவாக உள்ளதால் அங்கு மீண்டும் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து சுகாதார நெறி முறைகளும் கட்டாயம் பின்பற்றப்படும் என்று அவர் தெரிவித்தார். 
 

;