கொழும்பு, அக். 3 - இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகை களைக் குறைக்க இடதுசாரி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சா ரத்தின் போது, முந்தைய ஜனாதிபதிகள் செய்த ஊழல், வீணடித்த மக்களின் வரிப்பணம், முறைகேடுகள் ஆகியவற்றிக்கு தீர்வு காண்பேன் எனவும், முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேவையற்ற செலவுகளைக் குறைப்பேன் என்றும் அனுர குமார திஸாநாயக்க வாக்குறுதி அளித்திருந்தார்.
இதனிடையே, செவ்வாயன்று ஜனாதிபதி திஸா நாயக்க தலைமையில் இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நவம்பர் 14 அன்று நடை பெறவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்த லுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும், முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து மேற்கொள்ளப்படும் செலவுகளை குறைக்கும் முடிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பான மாற்று ஆலோசனைகளை வழங்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சித்திர சிறி தலைமையில் ஒரு குழுவை அமைத்தும் அமைச்சரவை கூட்டத்தில் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த குழு 2 மாதங்களில் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.