world

img

கொரோனாவால் இறந்தவர்களின் உடலைப் புதைக்க அனுமதி - இலங்கை அரசு

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு நாள்தோறும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் இறந்தவர்களின் உடலை ஆழமாக குழிதோண்டி புதைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் , அதிக அளவு உடல்களை புதைப்பதால் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதாகவும், இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் உடலை புதைக்கவும், எரிக்கவும் இலங்கை அரசு தடை விதித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் விதிக்கப்பட்டிருந்த  தடையை  தற்போது இலங்கை அரசு நீக்கியுள்ளது.
 

;