world

img

இலங்கை நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்

இலங்கையில் சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்பு  மசோதா எதிர்ப்புகளை  மீறி சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா இணையவெளியில் மக்களின் கருத்து சுதந்திரத்தை முடக்கும் என எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. இந்த மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளு மன்றம் பிப்.1 அன்று ஒப்புதல் வழங்கியுள் ளது.  சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர் தன சட்டத்திற்கு கையெழுத்திட்டு  சான்றளித் ததாக நாடாளுமன்ற செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.