world

img

இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு

இலங்கையில் படகு கழிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு இலங்கையில் உள்ள குறிஞ்சகேனி நகரில் இருந்து கின்னியா நகரை நோக்கி 23 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனை அடுத்து கடற்படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

;