world

img

இலங்கையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பிரதமர், ஜனாதிபதி பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்சே தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

அதனைத்தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

இதனைத்தொடர்ந்து முதல் கட்டமாக தனது அமைச்சரவையில் 4 அமைச்சர்களை அவர் கடந்த சனிக்கிழமை நியமனம் செய்தார். இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் மேலும் 9 பேர் புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். சுற்றுலா, மருத்துவம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

;