இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.12 பேர் மாயமாகியுள்ளனர்.
மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலையில் ஞாயிற்றுக்கிழமை எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது.
படாங் தேடல் மற்றும் மீட்பு படையின் தலைவர் அப்துல் மாலிக் கூறுகையில், 26 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படாமல் இருந்துள்ளனர். அவர்களில் 3 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 12 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது எரிமலை வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.