world

img

இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் - 3 பேர் பலி

இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
“இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் பாலி தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன” என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் அதனைச் சரிசெய்யும் பணிகளில் மீட்புப் படையினர் இறங்கியுள்ளனர்” என்று செய்தி வெளியாகி உள்ளது. 

;