இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா, நங்கஜீக் மாவட்டத்தில் உள்ள செலாபுரோ கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் சுற்றியுள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி மக்களின் குடியிருப்புகள் சேதமடைந்தன.
நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் தன்னார்வலர்கள், பாதுகாப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.