world

img

இந்தோனேசியா : அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிக்கு அனுமதி

இந்தோனேசியா அரசு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி விநியோகத்திற்கு அனுமதியளித்துள்ளது.

உலக முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்துகள்  கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அவற்றில் ஒன்றான ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்து உள்ள தடுப்பூசி அஸ்ட்ரா ஜெனகா ஆகும்.
இந்த தடுப்பூசியை போட்டு கொண்ட சிலருக்கு ரத்த உறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறி பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தது. இந்நிலையில் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், நன்கு செயல் ஆற்ற கூடியதாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து ஸ்பெயின் , இத்தாலி , பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கின. 
தடுப்பூசியால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளில் தெளிவாகியிருப்பதால், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
இந்நிலையில், இந்தோனேசியாவிலும் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி  அந்நாட்டு அரசு அனுமதி தந்துள்ளது.


 

;